Saturday, January 31, 2009


நாளையும் உரைத்திடு!

உள்ளம் உரைப்பது உண்மையென்றால்
உனக்கு ஏது துன்பமடா?
கள்ளம் இல்லா நெஞ்சினிலே ஊறும்
கருணைக்கு ஏது பஞ்சமடா!

பொல்லா மனிதர் உலக மடா - இதைப்
புரிந்து நீயும் செயல்படடா!
நாளைப் பொழுதும் நிச்சயமே! நீ
நாளையும் உரைத்திடு சத்தியமே!

நேர்வழி சென்றே ஜெயித்திடடா - புவியில்
நெறிகெட்ட மாந்தரைச் சிறையிடடா!
இன்னலில் தவிக்கும் மக்களுக்கு - உன்னால்
இயன்றதைச் செய்திட முனைந்திடடா!

பாரத நாட்டின் தன்மானம் - உன்
நெஞ்சினில் என்றும் நிற்கட்டும்!
தீரனாய் நீயும் வாழ்ந்திடடா - தியாகத்
தீயில் உன்னைச் சுட்டெடடா!

ஒரு தாய் மக்கள் எல்லலோரும் - எனும்
உணர்வை நாளும் வளர்த்திடுவாய்! நீ
இந்தியத் தாயின் இளைய மகன்
என்பதை என்றும் மறவாதே!

No comments: