Saturday, January 31, 2009


வாழ்க தமிழ்!!!

வானவர் அமுதே!
வையகக் காற்றே!
தேனின் சுவையே!
செங்கரும்பின் சாறே!

விண்ணின் ஒளியே!
விசும்பின் மழையே!
சொல்லின் சுவையே!
சுவைதரும் கனியே!

பொதிகைத் தென்றலே!
பொக்கிசப் புதையலே!
அரும் மருந்தே!
அரிய விருந்தே!

மலரின் மணமே!
நதியின் சுகமே!
ஒலியின் உயிர்ப்பே!
உணர்வின் துடிப்பே!

இளமையின் உருவே!
இனிமையின் வடிவே!
வண்டமிழே! செந்தமிழே!
வாழ்க! நீ வாழ்கவே!

2 comments:

Unknown said...

NEER VALGAA

NUM THAMIL VALGAA

ANBUDAN

SANKARARAJ,
BSNL, COIMBATORE

Mylsamy said...

சங்கர் ராஜா,
உங்களைப்போன்றவர்களின் உள்ளமும் வாழ்த்துக்களும் உள்ளவரை என்றும் நம் தாய் தமிழ் வாழும்.