Tuesday, March 3, 2009



அமைதியைத்தேடு

வடக்கே இமயமலை
தெற்கே குமரிமுனை!
இடையில் பல பிரிவினை!
இது தான் இன்றைய நிலை!

ஆட்சியைப் பிடித்தவன் ஆட்டத்திலே
ஓட்டைப் போட்டவன் வாட்டத்திலே!
குற்றம் சொன்னவன் சிறைக்குள்ளே
தப்பைக் கண்டவன் தலையில்லே!

ஜாதியின் பெயரால் சண்டையங்கு
சட்டம் இருந்தும் பயனில்லே!
அமைதியை தேடா மனிதரில்லே
அது தான் யாருக்கும் கிடைக்க வில்லே!

விதியைக் காக்க பஞ்சாயத்து
வெறியுடன் தாக்க பஞ்சாப்பு!
இலங்கையில் தமிழர்கள் கசாப்பு
எங்கம் அமைதி போயாச்சு!

நேற்றைய நண்பன்
இன்றைய பகைவன்!
நாளைய மனிதன்
புரியா ஒருவன்!

மீண்டும் காலம் மாற வேண்டும்
அமைதி விரும்பிகள் ஆள வேண்டும்!
தூங்கும் இளைஞர் விழிக்க வேண்டும்
தூக்கியே பாரதத்தை நிறுத்த வேண்டும்!

No comments: