Thursday, February 5, 2009


காதல்!
சிந்தை ஒரு மொந்தை - அதில்
(அதில்) கள்ளை நிரப்பு!
கள்ளின் சுவை கவிதை எனச்
சொல்லில் பரப்பு!

முந்தை நீ உண்ட மது
தமிழை நினைத்து
விந்தை இது இல்லையென
கவிதை நடத்து!

சொல்லும் விதம் உந்தன் வினை
சுயமாய்த் தொகுத்து
சொல்லும் ஒரு சொல்லும் - தீச்
சுடராய் நிறுத்து!

உள்ளும் மனம் துள்ளும் விதம்
கொள்ளும் கருத்து
தெள்ளும் தீந் தமிழில் - நீ
சீராய் வகுத்து...
காதல் மது போதை - அதைக்
கருத்தில் தைத்து
மேவும் உன் கவிதை தனை
மேலாய்ப் படுத்து

காவும் கடல் வானம் - மலை
காணும் யாவும்
நாளும் நிலையாகும் புவி
அது போல் 'காதல்'.

பட்டுத் துகில் தொட்டால் சுகம்
அதுவே காதல்!
எட்டுத் திசை பட்டால் - நிதம்
மதுவே காதல்!

வட்டும் தினம் கொட்டும் குளிர்
தட்டும் காதல்!
கிட்டும் சுவை லட்டின் சுகம்
சொட்டும் காதல்!

பேழை வெளி வீசும் ஒளி
முத்தே காதல்!
வாழையடி வாழையென
வளரும் காதல்

ஜாதி மதபேதம் ஒழி
சக்தி காதல்!
மோகமது மோட்சம் பெற
பக்தி காதல்!

வீரம் என தீரம் என
விழைக்கும் காதல்
தாரம் என ஆரம் தர
அழைக்கும் காதல்!

ஜீவன் அது ஜீவன் பெற
சித்தி காதல்!
சித்தர் முதல் பித்தர் வரை
போற்றும் காதல்!

No comments: